இந்தியாவில் கொரோனா அதிகாமாக பரவி வருகிறது. இதனால், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அகமது படேல், அதில், கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
I have tested positive for Covid19. I request all those who came in close contact with me recently, to self isolate
— Ahmed Patel (@ahmedpatel) October 1, 2020