இன்று மார்ச் 16ம் நாள் தியாகி பொட்டி ஆந்திர மாநிலத்தின் பிதா ஸ்ரீராமுலு பிறந்த நாள்…!!

இன்று மார்ச் 16ம் நாள் தியாகி பொட்டி ஸ்ரீராமுலு பிறந்த நாள்
ஆந்திர மாநிலத்தின் பிதா பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் பிரிந்து தனி மாநிலமாக அமைவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தத் தியாகி. இவருடைய உயிர்த்தியாகம்தான் ஆந்திரா உருவாகக் காரணமாக இருந்தது. ஆகவே ஆந்திர தெலுங்கு மக்கள் போற்றும் தியாகியாக இவர் விளங்குகிறார்
அவ்வாறு ஆந்திர மாநிலம் பிறந்தபோது அம்மாநிலத்தின் தலைநகரமாக மதராஸ் அறிவிக்கப்படவெண்டுமென்ற அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஏனெனில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விபரத்தின்படி அப்போது சென்னை மாநகரத்தில் 40 % மக்கள் மட்டுமே தெலுங்கு பேசுபவர்களாக இருந்தனர்.
பொட்டி ஸ்ரீராமுலுவின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்திலிருந்து தற்போது தெலிங்கானா என்று மற்றொரு புதிய மாநிலமும் பிரிந்து விட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment