புதுச்சேரி ஜிப்மரில் இந்தி கட்டாயம் – திமுகவினர் முற்றுகை போராட்டம்! ஏராளமானோர் கைது!

இந்தியை அலுவல் மொழியாக அறிவித்ததை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை திமுகவினர் முற்றுகை.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவித்ததுக்கு, அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் இன்று மருத்துவமனை முன்பு 500க்கும் மேற்பட்ட திமுகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்தியை கட்டாயமாக்கும் அறிவிப்பை திரும்ப பெற கோரி சிவா தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்று, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு சுற்றறிக்கைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு வாயிலாக தமிழர்களை சீண்டாதீர்கள் என்றும் இந்தியை திணிக்கும் வகையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை திருச்சி அளிக்கிறது என்வும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்