சர்ச்சை பேச்சு ! கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் இவர் மீது பல இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால்  கமல் தன் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் , இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  கமலஹாசன் முறையிட்டார்.

ஆனால் உயர்நீதிமன்ற மதுரை  கிளை , கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது இன்று  (மே 20-ஆம் தேதி) தீர்ப்பு வழங்கியது.கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.ரூ.10 ஆயிரம் மற்றும் 2 நபர் உத்தரவாதத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 நாட்களுக்குள் அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கமல் முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment