ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாயிகள் போராட்டம்

தமிழகத்தில் விழுப்புரம், நாகை,கடலூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு, வேதாந்த குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து, மன்னார்குடி, கோட்டூர் திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூந்தநல்லூர் ஆகிய கிராமங்களில், இத்திட்டம் செயல்பட்டால் விவசாயம் அழிந்துவிடும் என்றும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் விவசாயிகள், மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment