2 கோடி தொண்டர்கள் இருப்பதாக பொய் சொல்கிறார்- ஓபிஎஸ்..!

ஓபிஎஸ் மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  “நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கூட்டணி குறித்து பேசி வருகிறோம். கூட்டணி அமைந்த உடன் செய்தியாளர்களிடம் தெரிவிப்போம் என கூறினார். தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். 2 கோடி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக இபிஎஸ் பொய் சொல்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மோடிதான் மீண்டும் பிரதமர் வர வேண்டும். ஏற்கெனவே நாங்கள் பாஜகவின் கூட்டணியில் செயல்பட்டுள்ளோம்

பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு?

. நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதில்லை. மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம். அதிமுக கொடியை நான் பயன்படுத்தக் கூடாது என்றுதான் தீர்ப்பு வந்துள்ளது, தவிர தொண்டர்கள் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு வரவில்லை. இரட்டை சிலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும் மீண்டும் நாங்கள் உரிமை கோருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

author avatar
murugan

Leave a Comment