ஹத்ராஸ் பெண்ணின் உடலை நள்ளிரவில் எரித்த சம்பவம், மனித உரிமை மீறலாகும் – நீதிமன்றம்

 ஹத்ராஸ்  பெண்ணின் உடலை நள்ளிரவில் எரித்த சம்பவம், மனித உரிமை மீறலாகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். அதன்படி, ஹத்ராஸ் வழக்கு  தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே அலகாபாத் உயர் நீதிமன்றம்  இந்த வழக்கினை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.அந்த வகையில் நடைபெற்ற விசாரணையில் ,எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பெண்ணின் உடலை போலீசார் உரிய மரியாதைகள் இன்றி அவசரம் அவசரமாக தகனம் செய்தது மனித உரிமை மீறலாகும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.