இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கவுதம் கம்பிர்.. கேக் கேட்ட யுவராஜ்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கிழக்கு டெல்லியின் எம்.பி.யுமான கவுதம் கம்பிர், தனது 39 ஆம் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குபவர், கவுதம் கம்பிர். இவர் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஓய்வினை அறிவித்தார். அதனைதொடர்ந்து 2019 ஆம் ஆண்டு, பாஜகவில் இணைந்து, தற்பொழுது கிழக்கு டெல்லியின் எம்.பி. ஆக இருந்து வருகிறார்.

கவுதம் கம்பீர், தனது கிரிக்கெட் வரலாற்றில் 242 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 10,324 ரன்களை குவித்த நிலையில், 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்குகாரணமாக இருந்தவர்.

இந்நிலையில் கவுதம் கம்பிர், இன்று தனது 39 ஆம் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அந்த பதிவில், கம்பிரின் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடையவும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையை தொடர்ந்து வழங்குமாறும், பிறந்தநாள் கேக்கை எங்கே எனவும் கேட்டுள்ளார். அவரைதொடர்ந்து கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பிசிசிஐ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.