சிறுமிகளின் விருப்பம் நிறைவேறுவதில் மகிழ்ச்சி – அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதியிடம் பூங்கா வேண்டும் என கோரிக்கை வைத்த சிறுமிகள். 

அமைச்சர் உதயநிதி, சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம் பகுதியில் ஆய்வு  மேற்கொண்டுள்ளார். ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி  பக்கத்தில், ‘சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம் ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா வேண்டும் என என்னிடம் கோரிக்கைவைத்த நிலையில், பூங்கா அமைக்க ரூ.14லட்சம் ஒதுக்கி நேற்று முன்தினமே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. “சிறுமிகளின் விருப்பம் நிறைவேறுவதில் மகிழ்ச்சி” என  பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment