இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே தண்ட செலவு..அறநிலையத்துறையை அறைந்த H ராஜா!காட்டம்

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதே தண்ட செலவு  என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காட்டமாக கூறியுள்ளார்.

அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  தேசிய பொதுசெயலாளர் முரளிதர ராவ் தலைமையில் மாநில மைய குழு கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அந்த சந்திப்பில்  600 ஏக்கர் கோவில் நிலத்தை வசிப்பவர்களுக்கு தமிழக அரசு வழங்க இருப்பது கண்டிக்கதக்கது.

கோவில் நிலங்களில் தான் வீடில்லாதவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டுமா ஏன் புறம்போக்கு நிலங்களில் கொடுக்கலாமே என்று கேள்வியெழுப்பிய அவர் கோவில் நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்??என்று மேலும் கேள்வி எழுப்பிய அவர் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதே ஒரு தண்ட செலவு  என்று  காட்டமாக கூறினார்.

 

author avatar
kavitha