குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ராஜினாமா!

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் வழங்கினார். குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்காக பாஜகவின் பூபேந்திர படேல் காந்திநகரில் உள்ள ராஜ்பவனுக்கு வந்து ஆளுநரிடம் தந்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

ராஜினாமா செய்துள்ள பூபேந்திர படேல் வரும் 12-ஆம் தேதி குஜராத் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களை பாஜக கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும், குஜராத் தேர்தலில் பாஜக 156 இடங்களில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த நிலையில், காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 1, சுயேச்சை 3 இடங்களிலும் வேற்று பெற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment