#JUSTNOW : குஜராத் கட்ச் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இன்று மதியம் 2.31 மணியளவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மாவட்டத்தைத் தாக்கியது, அதன் மையம் ராபரில் இருந்து 13 கிமீ தென்-தென்மேற்கு (SSW) தொலைவில் இருந்தது” என்று காந்திநகரில் உள்ள நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் (ISR) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம், குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ஜிஎஸ்டிஎம்ஏ) படி,  3-க்கும் அதிகமான அளவு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

2001 ஆம் ஆண்டு கட்சைத் தாக்கிய நிலநடுக்கம், கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இந்தியாவில் மூன்றாவது பெரிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய அழிவாகும். அதில் சுமார் 13,800 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1.67 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment