சாண்டியின் உலகத்திற்காக பாடப்பட்ட அட்டகாசமான பாடல்! மகிழ்ச்சியின் உச்சத்தில் பறந்த சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தற்போது சாண்டி, லொஸ்லியா, முகன் மற்றும் ஷெரின் நான்கு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டி தனது நகைசுவை பேச்சாலும், தனது அன்பான குணத்தாலும், அங்குள்ள போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடததஹி பிடித்துள்ளார்.
சாண்டியை பொறுத்தவரையில், அவர் தன்னை சுற்றியுள்ள அனைவரையும் மிகவும் சந்தோசமாக வைத்துக் கொள்வார். என்ன தான் சந்தோசமாக வைத்திருந்தாலும், தனது மகளான லாலாவை நினைக்கும் போது இவர் கலங்குவதுண்டு. இந்நிலையில், பிக்பாஸ் 100-வது நாளில், மிகவும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சாண்டியின் மகளான லாலாவுக்காக பாடல் பாடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.