நெல்லை இருட்டுக்கடை பொறுப்பை கையிலெடுத்த பேரன்! 20 நாட்களுக்கு பின் கடை திறப்பு!

நெல்லை இருட்டுக்கடை பொறுப்பை கையிலெடுத்த பேரன்.

தமிழகத்தின் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான, ஹரிசிங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இவர் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கு பின், இருட்டுக்கடை 20 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. இக்கடையை நான்காம் தலைமுறை வாரிசான சூரத்சிங் திறந்து, வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தாத்தா ஹரிசிங் கடையில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வாடிக்கையாளர்களிடம் புன்முறுவலோடு தான் பழகுவார். நானும் அதனையே கடைபிடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.