நெல்லை மேயர் கொலை வழக்கில் சிக்கினார் முக்கிய குற்றவாளி ! யார் அந்த நபர்!

திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.

கடந்த 23 ம் தேதி வீட்டிற்கு உள்ளேயே மூவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.  குற்றவாளிகளை தேட 3 தனி படைகளை அமைத்து நெல்லை மாநகர கமிஷ்னர் உத்தரவிட்டார். இதை அடுத்து குற்றவாளிகளை தேடி காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். சங்கரன்கோவில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மீதும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர் காவலர்கள்.

இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று வீட்டை தாண்டி கார் ஒன்று அதிவேகத்தில் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில், அந்த கார் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனின் கார் என்று கண்டறிந்தனர். இதை அடுத்து, கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

 

மேலும், இந்த கொலையில் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் தெரிகிறது.