ஊரடங்கின் போது திருட்டுத்தனமாக மது விற்பனை! 50 லட்சம் மதிப்புள்ள சரக்கிற்க்கு சீல்!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற மற்ற எதற்காகவும் வெளியில் வர அரசு தடை விதித்துள்ளது. அதேபோல மருந்து கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல்கள் (பார்சல் மட்டும் ), காய்கறி கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை திறக்கமட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மதுபான கடைகளுக்கு திறக்க அனுமதி இல்லை. இந்நிலையில் காரைக்காலில் ஒரு மதுபான கிடங்கில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்துள்ளது. தகவலறிந்த அதிகாரிகள் அந்த மதுபான கிடங்கிற்கு சீல் வைத்தனர். இந்த மதுபான கிடங்கில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கிடைத்துள்ளன. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.