நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராசு மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், தமிழகம் முழுவதும் மே-31 வரை அரசு ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ள நிலையில், சில  தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலாத நிலையில் தான் உள்ளனர். 

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்கள் முன்பு வைத்து கொண்டு, விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனையடுத்து, தற்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களை அரசு விரைவில் திறக்காவிட்டால் நெல் வீணாகும் என்று அவர்கள் வேதனை  தெரிவித்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.