சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு குளிர்சாதன பேருந்து..! 10 பேருக்கு காயம்..!

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு குளிர்சாதன பேருந்து. 

மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு குளிர்சாதன பேருந்து, உளுந்தூர் பேட்டை புறவழிச்சாலை அருகே வந்த போது, பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. மொத்தம் 37 பேர் பயணித்த இந்த பேருந்தில், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்ததனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சாலையோரம் கவிழ்ந்துள்ள பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் தூக்க கலக்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.