நியாயவிலை கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு-தமிழக அரசு..!

விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை செயல்பட்டதால் பணிநாட்களுக்கு ஈடுசெய்ய தமிழக அரசு விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் நிவாரண தொகை வழங்க கடந்த விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை இயங்கியதால் பணிநாட்களுக்கு ஈடுசெய்ய தமிழக அரசு விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளில் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைகளுக்கு வீடுதோறும் சென்று டோக்கன் வழங்கும் பணி மற்றும் நிவாரண முதல் மற்றும் இரண்டாம் நிவாரண தொகை வழங்கும் பணியும் மேற்கொண்டதால் விடுமுறை நாட்களான 16.05.2021, 04.06.2021 மற்றும் 11.06.2021 ஆகிய நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 16.05.2021 , 04.06.2021 மற்றும் 11.06.2021 ஆகிய விடுமுறை நாட்களில் நியாயவிலை கடைகள் வேலை நாளாக செயல்பட்டதற்கு பதிலாக ஜூலை 17, 24 மற்றும் ஆகஸ்ட் 14-ம் தேதி ஆகிய நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan