பருப்பு வடைக்குள் சுண்டெலி..! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்..!

சின்னாளம்பட்டி பகுதியில் டீக்கடை ஒன்றில் வாங்கிய வடைக்குள் கருகிய நிலையில் சுண்டெலி இருந்துள்ளது. 

திண்டுக்கல் சின்னாளம்பட்டி பகுதியில் டீக்கடை ஒன்று உள்ளது. அந்த டீக்கடையில் பலகாரங்களை பொதுமக்கள் வாங்கி சொல்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று அந்த கடையில் 10 வயது சிறுமி ஒருவர் வடை வாங்கி சென்றார். பருப்பு வடையை எடுத்து சாப்பிடுவதற்க்காக வடையை பிய்த்துள்ளார். அப்போது அந்த வடைக்குள் கருகிய நிலையில் சுண்டெலி ஒன்று இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, பெற்றோரிடம் காண்பித்துள்ளார். அவரது பெற்றோர் சுண்டெலியுடன் கூடிய வடையை டீக்கடைக்கு எடுத்துச் சென்று இது தொடர்பாக டீக்கடைக்காரரிடம் கேட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment