சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஓர் குட்நியூஸ்..! வரும் 20-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா..! முதல்வர் பங்கேற்பு..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா வரும் 20-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

2021- ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள், உலக கோப்பை கிரிக்கெட் முடிந்ததும் தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை தமிழ்நாடு முதல்வரிடம் அளிப்பார். அந்த விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்தியா திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா வரும் 20-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.