பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கான கோஸ் எஸ் (GOES S) என்ற செயற்கைகோளை விண்ணில் ஏவியது நாசா!

நாசா  வானிலை நிலவரங்களை முன்கூட்டியே அறிவதற்கான மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

கோஸ் எஸ் (GOES S) என்ற அந்த செயற்கைகோள் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் கேப் கேனவரலில் (cape canaveral) உள்ள தளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்திய மதிப்பின்படி சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் மேற்குப் பிராந்தியத்தில் ஏற்படும் புயல், காட்டுத் தீ, வெள்ளம், மண் சரிவு ஆகிய பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கு இந்த செயற்கை கோள் உதவும். இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்ட போது ஏராளமான வானியலாளர்கள் திரண்டிருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment