‘திறமைக்கு வாய்ப்பளியுங்கள்’ – 5-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமலஹாசன்..!

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 5-வது பட்டியலை கமலஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்,    மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 5-வது பட்டியலை கமலஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகத் தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களின் 5-ஆவது கட்ட பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள். திறமைக்கு வாய்ப்பளியுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.