மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மரியாதை..!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், டெல்லி ராஜ்கோட்டில் மாதமா  நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். 

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்துத்வாதிகள் காந்தியை கொன்று விட்டதாகவும் அவர் உயிருடன் இல்லை என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். எங்கெல்லாம் உண்மை இருக்கிறதோ அங்கெல்லாம் காந்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என, #GandhiForever என்ற ஹேஸ்டேக்குடன் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், டெல்லி ராஜ்கோட்டில் மாதமா  நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.