திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல்லுக்கு பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை

  • விசாரணை முடிவில்  கர்டினல் பெல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கார்டினல் பெல்லுவிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.
  • கார்டினல் பெல் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகு தான் பரோல் பெற அனுமதிக்கப்படுவார் என தீர்ப்பில் கூறியுள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல் மீது சிறார்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறினார். கடந்த 1990 -ம் ஆண்டு பிற்பகுதிகளில் 13 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக  தவறான முறையில் நடந்து கொண்டதாக ஜார்ஜ் பெல் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கு விக்டோரியா மாகாணத்தில் உள்ள கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணை முடிவில்  கர்டினல் பெல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கார்டினல் பெல்லுவிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.கார்டினல் பெல் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகு தான் பரோல் பெற அனுமதிக்கப்படுவார் என தீர்ப்பில் கூறியுள்ளனர்.
தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள  கார்டினல் பெல் ஜூன் மாதத்தில் தீர்ப்பை எதிர்ப்பு மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
author avatar
murugan

Leave a Comment