ஜியோ வாடிக்கையாளர்களே..! இனிமேல் நீங்க ரூ.1-க்கு ரீசார்ஜ் பண்ணலாம்..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை வழங்கும் நிறுவனமாக ஜியோ நிறுவனம் மாறியுள்ளது.

இந்நிலையில், ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தின்படி வெறும் ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ்  செய்தால் 100 எம்பி டேட்டா கிடைக்கும். இதற்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும், ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த 100 எம்பி பயன்படுத்திய பின், அவர்களது இணைய இணைப்பின் வேகம் நொடிக்கு 65 கிலோபிட்டாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரீசார்ஜ் சேவையை பெறுவது எப்படி? 

இதனை மை ஜியோ அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே பெற முடியும். அதில் ரீசார்ஜ் > வேல்யூ > Other Plans என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் அதன் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.