கஞ்சா கடத்தல் – 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில்,தேனியை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை பல்லாவரத்தில் 56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில்,தேனியை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில், போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது; சமீப காலங்களில் இளம் பருவத்தினர் போதைப்பொருள் பயன்படுத்துவது ஆபத்தான விகிதத்தில் உள்ளது என நீதிபதிகள்  தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment