இன்று முதல் மதுரையில் 12-ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு

இன்று முதல் மதுரையில் 12-ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மதுரையில் 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அங்கு மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4805 ஆக உள்ளது.மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 24 தேதி முதல் 5-ஆம் தேதி வரை அங்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஜூலை 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு  நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது .மதுரை மாநகராட்சி,பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முழு ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துக்கப்பட்டுள்ளது.மேலும் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.