நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர்

தமிழகத்தில் நாளை முதல் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்கும் திட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் நாளை முதல் மறுபயன்பாடு செய்யக்கூடிய இலவச முகக்கவசம் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார். மேலும், வீட்டில் உள்ள நபர் ஒருவருக்கு இரண்டு என்ற கணக்கில் மொத்தம் 13 கோடி 48 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது.