புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் திரு.புதுவை கண்ணன் அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் குறிப்பில், ‘புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் அமைச்சர். நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான திரு. புதுவை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.

புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் காலமானார்..! புதுச்சேரி முதல்வர் இரங்கல்..!

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளவயது முதல் பணியாற்றிய திரு. கண்ணன் அவர்கள், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராகத் திகழ்ந்து வந்தவர் ஆவார். அவரது மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும்.

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும். அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.