திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில்..!

முன்னாள் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நேற்று, இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment