புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புதுச்சேரி முன்னர் முதல்வர்…!

முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.