என்றைக்கும் நான் திமுக காரன் தான் – துரைமுருகன்

 என்றைக்கும் நான் திமுக காரன் தான் என்று  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நேற்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

திமுகவில் துணை பொதுச்செயலாளராக  ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன்  செய்தியாளர்களிடம் பேசுகையில் ,என்றைக்கும் நான் திமுக காரன் தான்.தற்போது எனக்கு பொறுப்புகள் அதிகமாகி உள்ளது. கட்சியில் இதுவரை வகுத்த பொறுப்பை வைத்து புதிய பதவியை சிறப்பாக செய்வேன். கருணாநிதி வழியில் எனது செயல்பாடு இருக்கும். தலைவருக்கு உறுதுணையாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.