அமெரிக்காவில் உள்ள 7,37,000 வாகனங்களை திரும்ப பெறும் ஃபோர்டு ..!

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மூலம் 2020-2022 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட Ford Escape மற்றும் 2021-2022 கண்டறியப்பட்ட Ford Bronco Sport ஆகிய வாகனங்களை திரும்ப பெற போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதில்,  1.5 லிட்டர் எஞ்சின்களை கொண்ட 345,451 வாகனங்களை திரும்ப பெற போவதாகவும், இந்த வாகனங்களின் எஞ்சின் பகுதியில் விரிசல் மற்றும் தீயை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் கசிவு உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு இது தொடர்பான குறைபாடுகள் சென்று உள்ளதாகவும், இதுவரை 8 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த தீ விபத்துகளின் மூலம் எவ்வித காயங்கள் மற்றும் விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த வாகனங்களில் பிரேக் சிஸ்டம் முறையாக செயல்படாமல் இருப்பதால், ஒருங்கிணைந்த ட்ரெய்லர்கள் இதனை சரி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட சிக்கல் அறிக்கைகள் வந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

author avatar
Rebekal