வீராங்கனை பிரியா மரணம்.! 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்.!

பெரியார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவராக இருந்த சோமசுந்தர்  மற்றும் முடநீக்கியல் துறை உதவி பேராசிரியர் பால்ராம் சுந்தர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் உயிரிழந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக துறை ரீதியிலான நடவடிக்கையும், இந்த உயிழப்பில் உண்மை நிலவரம் கண்டறிய விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவி சிகிச்சை எடுத்துக்கொண்ட பெரியார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவராக இருந்த சோமசுந்தர்  மற்றும் முடநீக்கியல் துறை உதவி பேராசிரியர் பால்ராம் சுந்தர் ஆகிய இரு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment