கோவையில் அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை உணவு இலவசம்!

கோவையில் அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை உணவு இலவசம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளதால், ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில்,இந்த ஊரடங்கு காலங்களில் ஏழை மக்கள் உணாவிற்கு கஷ்டப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் ஜூன்-30ம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஜூன் மாதத்திற்கான கட்டணமாக, ஆட்சியர் ராஜாமணியிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.87 லட்சம் வழங்கியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.