கொரோனா கட்டுப்பாடு இப்போது தான் நீங்கியது.? 2.5 வருடம் கழித்து சென்னையில் மீண்டும் தொடங்கிய விமான சேவை.!

சென்னை முதல் யாழ்ப்பாணம் வரையிலான விமான சேவை இன்று முதல் துவங்கியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விதிக்கப்பட்ட தடைகள் பெரும்பாலும் நீங்கி விட்டாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கட்டுப்பாடுகள் இன்னும் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த ஒரு சில கட்டுப்பாடுகளும் தற்போது நீங்கி வருகின்றன. அந்த கட்டுப்பாடுகள் நீங்கும் போதுதான் கொரோனா கட்டுப்பாடு என்பதே நமக்கு நியாபகம் வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக இரண்டரை வருடம் தடைப்பட்டு இருந்த சென்னை முதல் யாழ்ப்பாணம் வரையிலான விமான சேவை இன்று முதல் துவங்கியுள்ளது. திங்கள் , செவ்வாய், வியாழன் , சனி ஆகிய தினங்களில் இந்த விமான சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment