ஸ்கூட்டரில் எடுத்து செல்லப்பட்ட பட்டாசு வெடித்தத்தில் தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழப்பு.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுதான் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலவகையான பட்டாசுகளை வெடித்து இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது உண்டு.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கணேசன், தனது இருசக்கர வாகனத்தின் முன் புறமாக மூட்டைகளில் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு தனது 7 வயது மகனை உடன் அழைத்துச் கொண்டு புதுவை நோக்கி சென்றுள்ளார். தமிழக எல்லைப் பகுதியான சின்ன பகுதியான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, அந்த நாட்டு பட்டாசு திடீரென்று வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் கணேசன் மற்றும் அவரது மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.