#Breaking : கல்லூரி மாணவர்களுக்கு செப்டம்பருக்குள் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.!

இறுதியாண்டு தேர்வுகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தவேண்டும் என பல்கலைக்கழக  மானிய குழு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் என அனைத்தும் திறக்கப்படாமல் இருக்கிறது.

பள்ளித்தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்தும் மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு, உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் இந்த அறிவுறுத்தல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பல்கலைகழக மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தவேண்டும் என பல்கலைக்கழக  மானிய குழு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.