இறுதி போட்டிக்கு இலங்கையை வீழ்த்தி தகுதி பெற்ற வங்கதேசம்!இறுதிபோட்டியில் இந்தியாவுடன் பலப்பரிட்சை….

முத்தரப்பு நிதாஷா கோப்பை டி20-ல்  இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் விளையாடி வரும்  போட்டியின் முக்கிய ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் இலங்கை அணியை முலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டதை அடுத்து இலங்கை முதலில் களமிறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

 

வெற்றி பெற 160 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில் களமிறங்கிய வங்கதேச அணி தமிம் இக்பால் மற்றும் மஹ்முதுல்லா ஆகியோர்களின் அபார ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

43 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு உறுதுணையாக மஹ்முதுல்லா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வங்கதேச அணி வெற்றி பெற்றதை அடுத்து நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோதவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment