2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்: ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு ?

2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை குறித்து காண்போம்..
2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.
இதில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒசூர் – பெங்களூரு இடையிலான 48 கிலோ மீட்டர் தூர இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கான 376 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் தமிழகத்தில் 20 ஆயிரத்து 64 கோடி ரூபாய் மதிப்பிலான 27 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதில் 3,198 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையும் அடங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியது.மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக, உத்தரப்பிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்கு 7,685 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.