ஃபரூக் அப்துல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி..!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவிற்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  அவரது மகன் உமர் அப்துல்லா ட்விட்டரில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ஃபரூக் அப்துல்லா லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பு கொண்ட அனைவரும் கட்டாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan