விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை ! பிரதமர் மோடி அவசர ஆலோசனை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப்-ஹரியானா  விவசாயிகள் 10-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை.விவசாய சங்கங்கள் தீவிரமாக ஆலோசனை பெற்று வந்த நிலையில், 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த டெல்லியில் விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.ஆகவே நாடு தழுவிய போராட்டத்திற்கு முடிவு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி கொண்டு வருகிறது.

இதனால் இன்று (டிசம்பர் 5 ஆம் தேதி)  விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில்,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வேளாண்மைத்துறை  அமைச்சர் நரேந்திர சிங் , தோமருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.