நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தீபிகா மற்றும் ரன்வீர் சிங் இருவரும் இந்தி இயக்குனர் லுவ் ராஜன் பட கம்பெனி முன்பு எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள், இது எங்கள் தீபிகா இல்லை என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, லுவ் ராஜன் படத்தில் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காரணம் என்னவென்றால், லுவ் ராஜன் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்தவர் என்பதாலும், அவர் மீது ‘மீடூ, புகார் இருப்பதாலும் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகை தீபிகா படுகோனே மீடூ இயக்கத்துக்கு ஆதரவானவர் என்பதாலும், பெண்களின் பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு எதிர்த்து குரல்கொடுப்பவர் என்பதாலும், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.