பிரபல இந்தி இயக்குனரின் படத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனேவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்! என்ன காரணம் தெரியுமா!

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தீபிகா மற்றும் ரன்வீர் சிங் இருவரும் இந்தி இயக்குனர் லுவ் ராஜன் பட கம்பெனி முன்பு எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள், இது எங்கள் தீபிகா இல்லை என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, லுவ் ராஜன் படத்தில் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காரணம் என்னவென்றால், லுவ் ராஜன் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்தவர் என்பதாலும், அவர் மீது ‘மீடூ, புகார் இருப்பதாலும் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகை தீபிகா படுகோனே மீடூ இயக்கத்துக்கு ஆதரவானவர் என்பதாலும், பெண்களின் பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு எதிர்த்து குரல்கொடுப்பவர் என்பதாலும், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.