தனி அலுவர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு – மசோதா தாக்கல்

தனி அலுவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.

அப்பொழுது உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்தார்அமைச்சர் வேலுமணி.இந்த மசோதா மூலமாக ,தனி அலுவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கப்படவுள்ளது.