பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தற்போது  7 பேரும் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இதனிடையே பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அந்த வழக்கில் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில்,  மேலும் 30 நாட்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி வரை பேரறிவாளனின் பரோலை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 9 ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.