மக்களை பார்க்க பயமா? தூத்துக்குடி வருவதற்கு தமிழக முதல்வர் தயக்கம் காட்டுவது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி!

தூத்துக்குடி வருவதற்கு தமிழக முதல்வர் தயக்கம் காட்டுவது ஏன்?

தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தூத்துக்குடியில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக உறையாற்றினார். கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்யும் முதலமைச்சர் பழனிசாமி, 3-வது முறையாக தூத்துக்குடி வருவதற்கு தள்ளி போடுவதற்கு என்ன காரணம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 அக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பாஜக பட்டியல் போட்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், முதல்வருக்கு தூத்துக்குடி வருவதற்கு என்ன தயக்கம்? 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முதலமைச்சர் வரவில்லை. சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வரவில்லை. தற்போது 3-வது முறையும் வர தயக்கம் காட்டுகிறார். முதல்வருக்கு மக்களை பார்க்க பயமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.