கிராமசபை கூட்டத்தின் செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்வு..! மநீம வரவேற்பு..!

கிராமசபை கூட்டத்தின் செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்த்தியதற்க்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு. 

கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்க்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக,கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது; அத்தீர்மானங்களை விரைவாக,முழுமையாக நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகள் மிக அவசியமாகிறது.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment