மஞ்சுவிரட்டில் காளை கிணற்றில் விழுந்து இறந்ததால் நிர்வாகிகள் கைது.!

  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து உள்ள கொத்தகோட்டை பகுதியில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
  • அதில் சின்னப்பள்ளி குப்பம் பகுதியை சார்ந்த ராமன் என்பவரின் காளை மாடு கிணற்றில் தவறி விழுந்து இறந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து உள்ள கொத்தகோட்டை பகுதியில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்ட சின்னப்பள்ளி குப்பம் பகுதியை சார்ந்த ராமன் என்பவரின் காளை மாடு மஞ்சுவிரட்டின் போது தவறி கிணற்றில் விழுந்தது.

தவறி விழுந்த காளை மாடு உயிரிழந்தது.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மஞ்சுவிரட்டு போட்டியை நடத்திய நிர்வாகிகள் பழனி , சங்கர் மற்றும் பூபாலன் ஆகியோரை கைது செய்தனர்.இதையெடுத்து இந்த கைது கண்டித்து ஆலங்காயம் கிராமத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த சாலைமறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

author avatar
murugan