#ENGvIND: மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்- ஐசிசி அறிவிப்பு..!..!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். 3 மணி அளவில் மழை பெய்ததால் டாஸ் தாமதம் ஆனது.

இதைத்தொடர்ந்து, இந்திய அணி முதலில் இறங்கிய பேட்டிங் செய்து வந்த நிலையில், 18.4 ஓவரில் பந்து வீசும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 18.4 ஓவர் முடிவில் இந்திய அணி 46 ரன்கள் எடுத்துள்ளனர். ரோகித் சர்மா 35, கே.எல் ராகுல் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

author avatar
murugan